ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும்¸எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை முன்னிறுத்துவதும் ஐக்கிய நாடுகள் சபையின் 2030 ஆண்டைய நிலைபேரான அபிவிருத்தியின் எட்டாவது இலக்காகும். இவ்விலக்கின் முக்கிய குறிகாட்டியாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வருடத்திற்கு குறைந்தது 7 விகிதமாக இருத்தல் வேண்டும். இவ்விலக்கினை அடைவதற்கான ஏனைய குறிகாட்டிகளில், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் திட்டங்களை பொருத்தவரையில், தொழில் விரிவுபடுத்தல் (diversification), தொழில்நுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள்¸ஆகியவற்றிற்கு அதிகளவு...
No Poverty – SDG 1 Read online at https://iesl.lk/SLEN/44/SDGs-V2.php There has never been such a discourse that the poverty is nothing to do with Engineering. In my view, like any other profession, be it Economist, Social Scientist, or Development worker, Engineers in all disciplines contribute in eradicating poverty. How do Engineers contribute to eradicate...
மின்சாரம் மற்றும் ஏனைய சக்தி வலு (Power and Energy sector) நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் மிக முக்கிய ஒரு துறையாகும். “அனைத்து மக்களும் நிலைபேறான நவீன சக்தியினை (modern energy) பெறுதல்”, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காகும். 2030களில்¸சக்திவலுக்களின் வினைத்திறனை அதிகரித்தல், மலிவான நவீன சக்தி சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், எரிபொருட் கலவையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களின் பங்கை கணிசமான அளவு அதிகரித்தல், என்பன நிலைபேறான அபிவிருத்தி...
2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 89% ஆன மக்கள் பாதுகாப்பான நீரை பெற்றுக்கொள்கிறார்கள். இலங்கையின் நுவரெலியா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 65% க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பான குடிநீரை பெறுகிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலேயே ஆகக்குறைந்த வீதம் பதிவாகியுள்ளது (54%). அங்கு அதிகமான மக்கள் தோட்டங்களில் வாழ்வதால் பொது நீர்மூலங்களை பாவிப்பதால் அவை பாதுகாப்பானதாக காணப்படவில்லை. பாதுகாப்பான நீர் மூலங்கள் எனும் போது அது மூடப்பட்ட கிணறுகள் (protected dug wells), குழாய்க்கிணறுகள் (tube...
இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் 38% ஆனோர் பெண்களாவர். எனினும் 8% வீதத்திற்கும் குறைவான பெண்களே உயர் பதவிகளை வகிக்கின்றனர். தொழில்துறைகளில் ஈடுபடுவோரிலும் அதிகமானோர் கூலித்தொழில் மற்றும் ஊதியமற்ற குடும்ப ரீதியான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாவர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக பல்லாயிரக்கணக்கான இலங்கைப்பெண்கள் பணிபுரிவதும் ஒரு பாரிய சவாலாகவே கருதவேண்டும். குடும்ப வறுமை மற்றும் சுமை காரணமாக தவிர்க்கமுடியாமல் பணிப்பெண் தொழிலைப்பெற்றுக்கொள்ளும் இவர்கள் பல பாலியல் உடலியல் வன்முறைக்குள்ளாகிவருகின்றனர். ஒரே தொழிலை செய்யும் ஆண்களுக்கு பெண்களை...
ஒரு மனிதன் தனது வாழ்நாள் பூராகவும் கற்கக்கூடியவனாக இருக்கிறான் (Lifelong learner). அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறையினூடகவோ (formal education) அல்லது தனது சொந்த வாழ்நாளில் பெறும் படிப்பினைகளாகவும் (informal education) இருக்க முடியும். நாட்டின் எல்லா பிரஜைகளும் குறிப்பாக இளைஞர் யுவதிகள் அனைவரும் கல்வியறிவு (literacy) மற்றும் எண்ணறிவு (Numeracy) பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற மிக அடிப்படை இலக்கை அடைவது கல்வியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். பொதுவாக ஒவ்வொரு மனிதனினதும் வயது வீச்சிற்கேற்ப சிறுவயதிலிருந்து...