Youth Entrepreneurship Sustainability (YES) HUB, Alumni Engagement Innovation Fund project from Sri Lanka is among the 2019 semifinalists, chosen out of more than 1,300 applications this year! https://alumni.state.gov/aeif/aeif-2019-semifinalists In 2019, the U.S. Department of State hosted its ninth annual Alumni Engagement Innovation Fund (AEIF) project competition. AEIF supports alumni initiatives that promote shared values...
வறுமையற்ற பட்டினியற்ற குடும்பங்கள் கிராமங்கள் நாடுகள் என இரண்டு மிக அடிப்படையான நிலைபேறான சமூக இலக்குகள் தொடர்பாக கடந்த வாரங்களில் எழுதினேன். இந்த வாரம் ஆரோக்கியமான நோய்களற்ற வாழ்வு தொடர்பான சமூக இலக்கினைப்பற்றி வெளிவருகிறது. ஒரு பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் எல்லா வயதுப்பிரிவுகளிலுமுள்ளவர்கள் சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வது அவசியமாகும். அது குழந்தைகள் சிறுவர்கள் வாலிபர்கள் நடுத்தர வயதினர் மற்றும் வயோதிபர்கள் என எல்லா மட்டங்களிலும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் காணப்படுகின்றன....
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்....
பட்டினியற்ற வாழ்வு வறுமையற்ற வாழ்வைப்போன்று மற்றுமொரு இறையருள். வறுமைக்கும் பட்டினிக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொடிய வறுமை பட்டினிக்கு இட்டுச்செல்லும். ஒரு சமூகத்தில் பரம ஏழையாக வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடியவர்கள் இல்லாமலில்லை. ஒரு நிரந்தர மாத வருமானத்தை இக்காலத்தில் பெறாத, நாள் வருமானத்தில் மாத்திரம் தங்கியிருக்கும் எத்தனையோ நபர்களையும் குடும்பங்களையும் சில சமூகக் குழுக்களையும் காண்கிறோம். ஒரு பஞ்ஞ காலம் வரும்போது – உதாரணமாக வரட்சியினால் பயிர்கள் வாடி இறந்து விவாசியிகளின் வருமானம் இல்லாமலாகும் போது,...
இவ்வுலகில் வறுமையில்லா வாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய இறையருள். வறுமையின் அகோர பிடியிலிருந்து ஒரு மனிதன் விடுபட்டு வாழ்வானேயானால் அது இறைவன் அவனுக்கு இவ்வுலகில் வழங்கிய மிகப்பெரும் அருள்களில் ஒன்று. கொடிய வறுமை ஒரு மனிதனின் வாழ்வின் அனைத்து விடயங்களையும் பின்னோக்கி நகர்த்துகிறது. அது ஒரு மனிதனின் இறைதொடர்பை இறைஞாபகத்தைக்கூட பலவீனப்படுத்துகிறது. வறுமையின் அகோரம் அவன் வாழும் சமூகத்தில் அவனை பலவீனப்படுத்துவது மட்டுமன்றி வறுமையில் வாழும் மனிதர்களையும் குடும்பங்களையும் கொண்ட சமூகமும் ஊர்களும் முன்னேற்றப்பாதையில் பயனிப்பதில்...